தொடுவானக் கனவுகளை
துரத்திக் கொண்டு
ஓடும்
ஆசை
மிகுந்திருந்தும்
வட்டத்துக்குள்
ஒரு வட்டத்துக்குள்
மட்டுமே
சுழலும் வாழ்க்கை ...!
கூண்டில் அடைபடினும்
தன்னிஷ்டப் படி
பறந்து திரியினும்
கிளி கிளியே !
பருந்துகளின் பார்வையில்
என்றென்றும்
கிளி கிளியே ...!?
தொடுவானக் கனவுகளை
துரத்திக் கொண்டு
ஓடும்
ஆசை
மிகுந்திருந்தும்
வட்டத்துக்குள்
ஒரு வட்டத்துக்குள்
மட்டுமே
சுழலும் வாழ்க்கை ...!
கூண்டில் அடைபடினும்
தன்னிஷ்டப் படி
பறந்து திரியினும்
கிளி கிளியே !
பருந்துகளின் பார்வையில்
என்றென்றும்
கிளி கிளியே ...!?
நெற்றிக் கண்
திறப்பினும்
குற்றம் குற்றமே!
குற்றம் பார்க்கில்
சுற்றம் இல்லை !
எதை விடுப்பது?
எதை எடுப்பது ?!
தொடர்பு எல்லைக்கு அப்பால்
போகத் துணிந்த
கணவரை எதிர் நோக்கி
உதடுகளைப்
பற்களால் அழுத்திக் கொண்டும்
விரல்களால்
நம்பர்களை அழுத்திக் கொண்டும்
மறுபடி
மறுபடி...
மறுபடியும்
காத்திருப்பாள்
அவள்
மனைவி !!!
பெருந்தொல்லைகள்:-
வாழ்க்கையில் பெரிய..பெரிய தொல்லைகள் எல்லாம் எப்படி வந்து சேருகின்றன என்று பாருங்கள்.தொல்லை என்பதெல்லாம் வெறும் வார்த்தை ...அது பெரிய கொடுமை என்றும் சொல்லத் தகும்.
உங்கள் குடியிருப்பில் உங்கள் வீடே முதல் வீடா? பிடித்தது ஏழரைச் சனி !!!போஸ்ட் மேனில் இருந்து கறிகாய் விற்பவர் வரை ungal மண்டையில் தான் முதல் மணி அடிக்கக் கூடும் ! கூரியர் காரர்களையும் சும்மா சொல்லக் கூடாது . அடுத்த வீட்டில் ஆளில்லா விட்டால் உங்கள் வீட்டு காலிங் பெல்லே எல்லோருக்கும் இதம் தரும் இன்னிசை ஆகக் கூடும்.
புரட்டாசியில் "கோவிந்தாக்கள் சங்கப் பிரபலங்கள்
"ஆடியில் ..."ஆத்தாவுக்கு கூழ் ஊத்துவோர் சங்கக் கண்மணிகள்"
வீட்டுக்குப் பக்கத்தில் "பிள்ளையார்...அம்மன்...நாகாத்தம்மன்...முருகன்...இன்ன பிற தெய்வங்கள் குடியிருந்தால்...திருவிழாக் காலங்களில் உங்கள் பர்ஸ் கதறிக் கொண்டு தினம் அழலாம்.அப்படி ஒரு பெருங்க் (கொள்ளைக்) கூட்டம் முற்றுகை இடும் முதல் வீட்டில் முதல் முதலாய்.
பிச்சைக் காரர்கள் சங்கம் வைத்து கூட்டம் போட்டுத் தண்டிக்க நினைத்தால் முதலிடம் முதல் வீட்டுக் காரர்களுக்கே?!
"பாழாப் போன வீடு...நாசமாப் போக...கூச்ச ...நாச்சமே இல்ல எட்டி நின்னு எட்டணா போடறான் அந்த முத வீட்டுக் முட்டாக் கபோதி ..." திட்டுக்கள் தாராளமாய் விழலாம் என்றேனும் நீங்கள் அச்சங்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராய் கலந்த கொள்ள வாய்ப்பிருப்பின்!!!
இது மட்டுமா?
விற்ப்பனை பிரதிநிதிகளின் வயிற்றெரிச்சல் வேறு?
"எப்போ போனாலும் லேசா தொறந்து எட்டிப் பார்த்துட்டு வேணாம் போன்னு வெரட்டுறான் அந்த வெங்கம் பய ..." இவனப் போயி எவன் குடி வச்சான் முத வீட்டுல? சனி முகத்துல முழிச்ச மாதிரி தான் ஒன்னும் போனியாகள இன்னைக்கும்"
இதெல்லாம் சும்மா சாம்பிளுக்கு தான் ...
அனுபவம் இருந்தா நீங்களும் கொட்டுங்க உங்க மான அவமானத்தை .
குறிப்பு:- முதல் வீட்டுக் குடித்தனக்காரராகவோ அல்லது அப்படிப் பட்ட அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் .
பள்ளி விட்ட
மாலை நேரம்
முதன் முதலாய்
புத்தம் புது தாவணியில்
சிட்டாக நீ பறக்க யத்தனிக்கையில்
செப்பனிட குவிக்கப் பட்ட
சரளைக் கற்களில்
இடரப் பட்ட உன் பாதங்கள்
தடுமாறி சரியும்போதா
இடம் மாறியது என் நெஞ்சம்?!
இன்னும் தெளிவில்லை ...!
எட்டி நின்று பெட்டிக்கடையில்
முறுக்கு வாங்கித் தின்கையிலே
விட்டு விட்டு அலறிய
உன் மென் குரலால்
சட்டென்று விழி நிறைத்தாய்
என் சிந்தையிலும் நீ நிறைந்தாய்...
பட்டு பூச்சியடி ...
நீ என் பாவை சந்திர பிம்பமடி !
அன்று நீ விழுந்திடாமல்
பாங்கோடு தாங்கி எழுப்பியவன்
அன்றே தான் விழுந்து விட்டேன்
உன் படபடக்கும் இமை நடுவில் ?!
எங்கே போனாலும்
உன் நினைவு துரத்துதடி
காணாமல் போனது போல்
வாழ மனம் முயலுதடி ...
என் கண்ணில் பாவையன்றோ ?
கண்ணம்மா எங்கும் உனைக் காண்பேனோ?
இன்னும் ஒரு பிறவி எடுப்பேனோ
ஏந்திழையே உனக்காக !?
எங்கே நான் தொலைந்தேன் ?
காதலில் உருகி வழியும் போதா ?
பெண் கேட்டு வந்த போதா ?
திருமணம் பேசி முடித்த போதா?
மூன்று முடிச்சு இட்ட போதா ?
ஊது பத்தி புகை மணக்க
கட்டில் சம்பங்கி மணம் நிறைக்க
கண்ணோடு கண் சேர்த்து
முயங்கும்போதா ...?!
எங்கே நான் தொலைந்தேன் ?
பிள்ளைக் கனியமுதாய்
பேசும் பொற்சித்திரமாய்
சின்னவளை மடியிலிட்டு
தாலாட்டுச் பாடிப் பாடி
என்னையும் தூங்க வைத்தாய் ...
அங்கே தான் தொலைந்தேனோ?
இன்னும் தெளியவில்லை
எங்கே தான் தொலைந்தேனோ?