Wednesday, January 28, 2009

அவள் மனைவி !!!

நெற்றிக் கண்

திறப்பினும்

குற்றம் குற்றமே!

குற்றம் பார்க்கில்

சுற்றம் இல்லை !

எதை விடுப்பது?

எதை எடுப்பது ?!

தொடர்பு எல்லைக்கு அப்பால்

போகத் துணிந்த

கணவரை எதிர் நோக்கி

உதடுகளைப்

பற்களால் அழுத்திக் கொண்டும்

விரல்களால்

நம்பர்களை அழுத்திக் கொண்டும்

மறுபடி

மறுபடி...

மறுபடியும்

காத்திருப்பாள்

அவள்

மனைவி !!!