tag:blogger.com,1999:blog-74911129360533100642024-02-08T02:40:00.406-08:00"சிந்தனை செய் மனமே...தினமும்karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-69288141143799720642009-12-11T10:14:00.000-08:002009-12-11T10:47:00.833-08:00விளம்பரம் ...அன்னையில இருந்து இன்னைய வரைக்கும் நமக்குப் பிடிச்சிப் போன விளம்பரங்கள வரிசைப் படுத்தி பார்த்தா என்னான்னு தோணுச்சா உடனே பிளாஸ் பேக் ஓட்டிட்டோம்.முந்தியெல்லாம் விளம்பரம் கம்மி தானுங்களே,இம்பூட்டு விளம்பரமெல்லாம் இல்லிங்களே!இப்பமெல்லாம் விளம்பரத்துக்கு நடுவுல தான் படமோ நாடகமோ பாக்க முடியுது...அன்னிக்கெல்லாம் நாங்க சின்னப் புள்ளைகளா இருக்கையில இம்புட்டு விளம்பர தொந்தரவு இல்ல தான் .சரி அத்த விட்டறலாம் .<br /><br />எனக்கு நெனவு தெரிஞ்சி மறக்காம இருக்க விளம்பரங்களை எல்லாம் சொல்லத் தானே இந்தப் பதிவே...<br /><br />மொதோ மொதோ ஞாபகம் வாறது எதுன்னா?<br /><br />நம்ம ரெடி மெனி ஷாப் விளம்பரமுங்க (மணி பர்ஸ் மாதிரி ஒரு பொம்மை ரெடி மேனி ஷாப் ரெடி மனி ஷாப்னு சொல்லிக்கிட்டு பறந்து பறந்து வரும் பாருங்க அதாங்க...<br /><br />அப்புறமாட்டு கேதான் பேன் ...உஷா பேன் ...கூடவே சொல்லாம இருக்க முடியுமா "ஓரியன்ட் பேன் " விளம்பரமுங்க. இப்பலாம் எ.சி ..எ.சி ன்னு அலையறமுள்ள அன்னிக்கெல்லாம் பேன் வாங்கறவங்க ரொம்ப ஜாஸ்திங்க. அதான் இம்புட்டு பேன் விளம்பரமாட்டு இருக்கும்னு இப்ப நினைசுக்குவேனுங்க நானு.<br /><br />ப்ராமிஸ் டூத் பேஸ்ட் விளம்பரம்.<br /><br />ரீகல் சொட்டு நீலம் "சொட்டு நீலம் டோய் ...ரீகல் சொட்டு நீலம் டோய் "(மறந்துற முடியுங்களா?!)<br /><br />உட்வார்ட்ஸ் கிரேப் வாடர் விளம்பரம் (" நான் குழந்தயா இருக்கச்சே எங்கம்மா இத தான் கொடுத்தாங்க")<br /><br />அரவிந்த சாமி வருவாரே அந்த லியோ காப்பி விளம்பரம் ...சாலிடர் டி.வி விளம்பரத்துக்கு கூட இவர் நடிகை கீதா கூட வந்ததா ஞாபகமிருக்கு பாருங்க எனக்கு.<br /><br />மனோரமா வர்ற போலியோ விளம்பரம்...<br /><br />ராலே டயர்ஸ் விளம்பரம் ...<br /><br />ஸ்ரீ தேவி வர்ற "சூர்யா பல்பு விளம்பரம்"<br /><span class=""></span><br /><span class="">அன்னிக்கெல்லாம் இந்த மிளகாப் பொடி விளம்பரமெல்லாம் (சக்தி மசாலா...ஆச்சி மசாலா)பார்த்தா மாதிரி ஞாபகத்துல இல்லைங்க.இதுகள்லாம் இப்பம் ஒரு பத்து இருபது வருஷம் மின்னே வந்ததாக்கும். அன்னைக்கு பிரஸ்டீஜ் குக்கர் விளம்பரம் பார்த்த ஞாபகம் கூட அம்புட்டுக்கு இல்லைன்னு தான் சொல்லணும் .</span><br /><span class=""></span><br /><span class="">ஒனிடா டி.வி விளம்பரம் ரொம்ப நாளாவே இருக்குதுங்க(தலைல கொம்பு மொளைச்ச வால் நீண்ட மனுஷன் ! ஒருத்தன் வருவானே( அண்டை வீட்டுக் காரர்கள் பொறாமைப் படடடும்ணு எதையோ சொல்லிட்டுப் போவான்)</span><br /><span class="">சுமங்கலி ஷாம்பூ விளம்பரம் பார்த்திருக்கேன்.<br /><br />சிக் ஷாம்பூ விளம்பரம் ..வெல்வெட் விளம்பரம்...ரெக்சோனா சோப்பு ...லக்ஸ் சோப்பு விளம்பரம்...ஐநூத்தி ஒன்னு துவைக்கற சோப்பு விளம்பரம்.வீல் சோப்பு .<br /><br /><span style="color:#000066;"><strong>எல்லாத்தையும் விட முக்கியாமான சங்கதி ஒன்னை சொல்ல விட்டுப் போச்சு பாருங்க.இதானுங்க ரொம்ப ரொம்ப பேமஸ் .<br /><br /></strong></span><span style="font-size:130%;color:#000066;"><strong>பி.டி.உஷா காடு மேடெல்லாம் ஓடி ஓடி தேடற கண்ணன் தேவன் டீ விளம்பரமும் ,<br /></strong></span></span><br /><span class=""><span style="font-size:130%;color:#000066;"><strong>நம்ம ஊர் உசிலை மணி பிரமாதமா "பேஷ்..பேஷ் சொல்ற நரசூஸ் காப்பி" விளம்பரமும் இல்லாம அன்னைக்கு டி.வி ல ஒரு மணி நேரம் கழிஞ்சிடக் கூடுமா என்ன?<br /><br /></strong></span>அது ஒரு காலம் இப்பவெல்லாம் அந்த விளம்பரங்களை பார்க்க முடியலை .இன்னிக்கு வர்ற விளம்பரங்களும் நல்லாத் தான் இருக்கு கண்ணுக்கு குளு குளுன்னு ,சில விளம்பரம் என்னவோ போர் அடிக்குதுங்க மறுக்கா பார்க்க,அன்னைக்கு அப்படி எந்த விளம்பரமும் போர் அடிச்சா மாதிரி தெரிலங்க.</span><br /><span class=""></span><br /><span class="">இங்கன நான் கிறுக்குனத யாருனாச்சும் படிச்சிங்கன்னா ரெண்டு வார்த்த உங்களுக்குப் புடிச்ச விளம்பரம் எதுன்னும் சொல்லி போட்டு போயிருங்க .என்னங்க நான் சொல்றது ? சரி தானுங்களே...?</span><br /><br /> <br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-3210371934724435872009-04-17T02:15:00.000-07:002009-04-17T02:47:10.357-07:00நானும் கட்சி ஆரம்பிக்கப் போறேன் ...ஓட்டுப் போடுங்க மக்களேஊருக்குள்ள நாலு பேத்துக்கு நம்மள அடையாளம் தெரிஞ்சிக்கிட்டாலே அவனவன் தான் ஒரு பிரபலம்னு நினைச்சுகிறான்யா...அது கெடக்குது கழுதை ?! அதை விட்ரலாம் ...அதான் குமுதத்துல "நீங்கள் ஒரு நிமிடச் சாதனையாளர்கள்னு "லேனா தமிழ்வாணன் சொன்ன விஷயம் ஞாபகத்து வந்ததால முதல்ல அந்த விஷயத்தை சொல்லிட்டேன்.<br /><br />இப்போ விஷயம் என்னனா ?<br /><br />அதென்னங்க இங்க நம்ம தங்கத் தமிழ் நாட்டுல மட்டும் எப்போ பாருங்க கட்சி ஆரம்பிக்கிறதெல்லாம் கடந்த சில வருஷமா நடிகருங்க மட்டும்னே ஆயிப் போச்சு ?! என்ன கொடுமைங்க இது ? யாரெல்லாம் அப்படி ஆரம்பிச்சிருக்காங்கனு பாருங்க ?<br /><br />முதல்ல நம்ம விஜயகாந்து அண்ணன்<br /><br />பின்ன நம்ம கார்த்திக்கு கூட கொஞ்ச நாலு பார்வர்டு பிளாக்குன்னு ஒரு கட்சிக்கு தலைவரா இருந்து அந்தக் கட்சியவே இப்போ காணாம அடிசிட்டாராக்கும்<br /><br />அப்புறம் நம்ம நாட்டாமை கூட ச.ம.க ஆரம்பிச்சாருங்க .சித்தி ஓட்டு அவருக்குத்தான் சந்தேகமில்லை ...அதுக்குன்னு எல்லாருமே கண்ண மூடிட்டு ஓட்டுப் போட்டு நம்மள முதலமைச்சரு நாற்காலில உட்கார வச்சிபிடுவாகனு எப்பிடித்தேன் இவுகளாம் நம்பி வாராகளோ !!!<br /><br />பிரபு கூட காங்கிரசுல சேர்ந்து நாட்டுக்கு சேவை பண்ணப் போறாராமே! சொல்லிக்கிட்டே இருக்காக இன்னும் செயல்ல இறங்கலை போல இருக்கு !!!(அய்யன் கட்சி ஆரம்பிச்சு பட்ட அடி ஞாபகமிருக்கு போல இருக்கு புள்ளைங்களுக்கும்!)<br /><br />இப்ப விஜய் வேற கட்சி ஆரம்பிக்கப் போறாராம் ,பத்திரிக்கைகாரவுக பக்கம் பக்கமா போட்டுக்கறாக...நடிகரு முதலமைச்சரு ஆகக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லுவாகளா என்ன? வாங்கண்ணே...நீங்களும் வாங்க ...வந்து இந்த பந்தியில குந்துங்க ,வடை கிடைச்சா வடை...இல்லாங்காட்டி பாயாசம் !!!<br /><br />எப்படியோ ஓட்டைப் பிரிச்சா சரிதான்<br /><br />அதான நம்ம முன்னாள் தலைவர்களோட ஆசை ;<br /><br />இந்நாள் தலைவர்களே நீங்களும் பயிற்சி தான எடுத்துகறிங்க அதனால சோர்வு வேண்டாம் ,சீக்கிரமே ...இருக்கறது ஆறரைக் கோடி ஜனம் இதுல ஓட்டுப் போடப் போகாதவுக சோத்தையும் சேர்த்துத் திங்க ஆளிருக்கும் எல்லா ஓட்டுச் சாவடியிலயும்...பின்ன என்ன செத்தவங்க ஓட்டு சாகாதவன் ஓட்டு எல்லாத்தையும் போட்டு இன்னொருக்கா தலைவரையோ இல்லனா தலைவியையோ ஜெயிக்க வச்சிப் போட்டு வாங்கித் தந்த பிரியாணியை ஒரு கட்டு கட்டிட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்து குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்க தான் போறோம் .<br /><br />திடீர்னு தான் இப்படி ஒரு யோசனை ஓடுச்சு மனசுக்குள்ள ...சாப்பிட்டு மத்தியானம் சாம்பார் வாசம் கைல மணக்க மோந்து பார்த்துகிட்டு திண்ணைல உட்க்கார்ந்தனா அப்படியே சிந்தனை இப்பிடிக்காப் போச்சு ...<br /><br />என்னாங்கறிங்களா ?<br /><br />அதொண்ணுமில்லை இந்த நடிகருக கட்சி ஆரம்பிக்கிறதும் ...வாய்ஸ் கொடுக்கிறதும் தன்னை ..தன் வசதி ..வாய்ப்பை ...தன் பாதுகாப்பை பலப் படுத்தத்திக்கத் தானே தவிர ! சும்மாங்காட்டி நாட்டுக்கு சேவை பண்ணுரதுக்கோசரம் இல்லைங்குது புத்தி ..<br /><br />சரி தானுங்களே!karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-74780954249228579802009-02-01T22:43:00.000-08:002009-02-01T22:57:39.220-08:00என்றென்றும் கிளி கிளியே ...!?<p></p><p><strong>தொடுவானக் கனவுகளை </strong></p><p><strong>துரத்திக் கொண்டு </strong></p><p><strong>ஓடும் </strong></p><p><strong>ஆசை </strong></p><p><strong>மிகுந்திருந்தும் </strong></p><p><strong>வட்டத்துக்குள் </strong></p><p><strong>ஒரு வட்டத்துக்குள் </strong></p><p><strong>மட்டுமே </strong></p><p><strong>சுழலும் வாழ்க்கை ...! </strong></p><p><strong>கூண்டில் அடைபடினும் </strong></p><p><strong>தன்னிஷ்டப் படி </strong></p><p><strong>பறந்து திரியினும் </strong></p><p><strong>கிளி கிளியே ! </strong></p><p><strong>பருந்துகளின் பார்வையில் </strong></p><p><strong>என்றென்றும் </strong></p><p><strong>கிளி கிளியே ...!?</strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-41658559138431538152009-01-28T09:29:00.000-08:002009-01-28T09:31:08.821-08:00அவள் மனைவி !!!<p><strong>நெற்றிக் கண் </strong></p><p><strong>திறப்பினும் </strong></p><p><strong>குற்றம் குற்றமே!</strong></p><p><strong>குற்றம் பார்க்கில் </strong></p><p><strong>சுற்றம் இல்லை !</strong></p><p><strong>எதை விடுப்பது?</strong></p><p><strong>எதை எடுப்பது ?!</strong></p><p><strong>தொடர்பு எல்லைக்கு அப்பால் </strong></p><p><strong>போகத் துணிந்த </strong></p><p><strong>கணவரை எதிர் நோக்கி </strong></p><p><strong>உதடுகளைப் </strong></p><p><strong>பற்களால் அழுத்திக் கொண்டும் </strong></p><p><strong>விரல்களால் </strong></p><p><strong>நம்பர்களை அழுத்திக் கொண்டும் </strong></p><p><strong>மறுபடி </strong></p><p><strong>மறுபடி...</strong></p><p><strong>மறுபடியும் </strong></p><p><strong>காத்திருப்பாள் </strong></p><p><strong>அவள் </strong></p><p><strong>மனைவி !!!</strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-89635161154622456352008-12-17T21:27:00.000-08:002008-12-17T22:19:25.978-08:00அரை ஆழாக்கு நைஸ் புழுதி...<font size="2">ஆடி மாதமே காற்றாடிக் காலம் முடிந்து விடவில்லை,இன்னும் ...இப்போதும் தொடர்கிறது என்பதை ஜன்னல் திறந்திருப்பின் நடு வீட்டுக்குள் வாரி வீசும் புழுதிக் காற்றை வைத்தே தீர்மானிக்கலாம்.இயல்பில் ஆடி மாசம் தான் காற்றுக் காலம்!</font><br /><font size="2">"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்" இந்தப் பழமொழியே சாட்சி ;</font><br /><font size="2">"புரட்டாசியும் ஐப்பசியும்" அடைமழைக் காலங்கள் தான், </font><br /><font size="2">"மார்கழி" குளிர் காலம்,கூதிர் காலம் பனிக் காலம் இப்படி எப்படி சொன்னாலும் மார்கழி குளிர் தானே மனசில் நிற்கும்.</font><br /><font size="2">பருவ நிலை மாற்றமோ என்னவோ? ஆடி மாதத்தில் எல்லாம் இப்போது காற்று கம்மியாகி விட்டதைப் போலொரு பிரமை?! ஆடியை விட மார்கழி தொடக்கம் முதலே அள்ளி அள்ளி வீசுகிறது காற்று (குப்பை...கூலம்...புழுதி வித்யாசமெல்லாம் வாடைக் காற்றுக்கு இல்லை போலும்!). </font><br /><font size="2">காற்றாடி (பட்டம் என்றும் சொல்லலாம்!) விடும் பையன்கள் மொட்டை மாடிக்குப் போகவே வேண்டாம்...முச்சந்தியில் நின்று கொண்டு தாராளமாக விடலாம்.பிய்த்துக் கொண்டு பறக்கும் காற்றாடி நூலோடு!அது பறந்து போய் யார் கழுத்தைச் சுற்றினால் தான் காற்றுக்கு என்ன வந்தது? கன ஜோராக வீசிக்கொண்டு இருக்கும் அது பாட்டுக்கு மார்கழி ,தை என்று விவஸ்தை எதுவுமின்றி!</font><br /><font size="2">இந்த மார்கழியில் தானா அரைப் பரீட்சை வைத்து லீவு விடுவது? இந்தப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு கொஞ்சமேனும் பெற்றோரின் கஷ்ட நஷ்டம் புரிவதே இல்லை எந்தக் காலத்திலும் ...அவர்கள் பாட்டுக்கு பரீட்சை என்று ஒன்றை வைத்து வருசத்துக்கு மூன்று தடவையாச்சும் லீவு விட்டு விடுகிறார்கள்?!</font><br /><font size="2">என்னாத்திற்கு இந்த லீவு என்கிறார்கள் பெற்றோர்கள்? பிள்ளைகள் வருஷம் முழுக்க நன்றாய் படிக்கட்டுமே! அதில் என்ன குடி முழுகி விடும்? இது சாத்தியமே இல்லை என்பது தெரியும் ."வாண்டுகளா ...வானரங்களா"...என்று சந்தேகம் வரவைப்பதைப் போல சில பிள்ளைகள் சேஷ்டைகள் செய்வதால் எல்லாப் பிள்ளைகளுக்கும் லீவு விட்டு விடுவதாக எங்கள் வீட்டு வாண்டு ஒருமுறை சொல்லியதுண்டு!!!</font><br /><font size="2">லீவு விடும் பழக்கத்தை யாராலும் மாற்றவே முடியாது தான் .குறைந்த பட்சம் இந்தக் காற்றுக் காலாத்திலாவது லீவேவிடக்கூடாது...ஐயோடா...இந்தக் குட்டி குறுமாணிகள் எல்லாம் தெருப் புழுதியில் தான் விழுந்து கும்மாலமடிக்கின்றன.உடம்புக்கு எது வேண்டுமானாலும் வந்து விடாதோ? சதா புழுதியில் புரண்டு ஆடினால்?</font><br /><font size="2">அட வீட்டிற்குள் அடைத்து வைக்கலாமென்றாலும் ஒரு பிரஜோஜனமும் இல்லை ?! தினப் படி ஐந்து முறை வீட்டை ஒழுங்கு பண்ணி கூட்டிப் பெருக்கி கழுவினாலும் தாராளமாய் ஒவ்வொரு தடவையும் அரை ஆழாக்கு நைஸ் புழுதி கிடைக்கிறது குப்பை வழித்தெடுக்கும் </font><br /><font size="2">பிளாஸ்டிக் முறத்தில்.</font><br /><font size="2">இந்த விஞ்சானிகள் எல்லாம் என்னெனவோ கண்டுபிடிக்கிறார்களே !...இந்த நைஸ் புழுதியை வைத்து ஆராய்ச்சி கீராய்ச்சி எதுவோ செய்து ஏதாவது கண்டு பிடித்தால் புண்ணியமாய் போகாதோ?</font><br /><font size="2">பாவம் காற்றுக்கு வாய் இருந்தால் அது கூட ஒரு பாட்டம் அழுது விட்டிருக்கும் புழுதியை அது வாரிக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளும் ...வீட்டடியிலும் போடப் போட நாமும் சளைக்காமல் கூட்டிப்பெருக்கி முறத்தில் அள்ளி அள்ளி அள்ளி மறுபடி தெருவிலேயே வீசுகிறோமே? இதைப் பார்த்துப் பார்த்து காணச் சகியாமல் அந்தக் காற்றும் கூட வாய் இருந்தால் கதறி அழக் கூடும் தான்!!!</font><br /><font size="2">கணவர்கள் தங்கள் மனைவிகளின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்ள தாராளமாக இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நைஸாகப் பேசி பேசியே அவர்களை குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டு .துல்லியமாக அவர்கள் அம்மா வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு(மனைவிகளுக்கு புருஷன் வீடு புகுந்த வீடு தானே!!!) வரும் போது நீங்கள் ஆபிஸ் டூர் என்று ஓடியே போய் விடலாம் ?!</font><br /><font size="2">புழுதி அடைந்து போய் பாழடைந்த பங்களா எபெக்டில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்வது பெரிய தண்டனை தான் மனைவிகளைக் கேட்டுப் பார்க்கலாம் விவரம் தெரியாதவர்கள்.இந்த நைஸ் புழுதி இருக்கிறதே அது ஒரு சாபக் கேடு என்கிறார்கள் பெண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக.</font><br /><font size="2">இதனால் என்னென்ன வரலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்,</font><br /><font size="2">ஆஸ்த்துமா </font><br /><font size="2">வறட்டு இருமல்</font><br /><font size="2">தொடர் தும்மல்</font><br /><font size="2">மூச்சுத் திணறல்</font><br /><font size="2">மூக்கடைப்பு </font><br /><font size="2">அப்புறம்...அப்புறம்... </font><br /><font size="2">கண்ணீர் !!!(கண்ணில் புழுதி விழுந்தாலும் கண்ணீர் வரும் தானே?!)அழுகை !!!( எவ்வளவு பெருக்கினாலும் தீராத புழுதிப் படலம் தட்டுப் பட்டால் அழுகையும் வரும் தானே!?)</font><br /><font size="2">சண்டை !!!(நைஸ் புழுதி பெருக்கிப் பெருக்கியே ஆய்ந்து ஓய்ந்து போய் உட்கார நினைத்தால் அந்நேரம் கணவரோ...பிள்ளைகளோ ஏதாவது கேட்டால் கட்டாயம் சண்டை வரும் தானே?!)</font><br /><font size="2">ச்சே...ச்சே...இந்த மார்கழியில் இந்த நைஸ் புழுதியால் வந்த வினையைப் பாருங்கள் எவ்வளவு நீளமான கட்டுரை எழுத வேண்டியதாகிப் போச்சு !!!எல்லாம் புழுதி மயம்!!!</font><br /><font size="2">பாத்திரம்...பண்டம்...உடுப்புகள்...கட்டில்....பீரோ ... கண்ணாடி ...சுவர் ...தரை எங்கும் புழுதி மயம்.</font><br /><font size="2">எனக்கு ஒரே ஆயாசமாய் இருக்கிறதப்பா !</font><br /><font size="2">அப்போ உங்களுக்கு ?எப்படி இருக்கும் என்று எழுதுங்கள் பின்னூட்டத்தில் .</font>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-53522850010141256372008-12-17T03:16:00.000-08:002008-12-17T03:21:58.819-08:00புரட்டாசி கோவிந்தாக்கள்,ஆடி ஆத்தாக்கள்,மற்றும் பிச்சைக் காரர்கள்<p><strong>பெருந்தொல்லைகள்:-<br /></strong>வாழ்க்கையில் பெரிய..பெரிய தொல்லைகள் எல்லாம் எப்படி வந்து சேருகின்றன என்று பாருங்கள்.தொல்லை என்பதெல்லாம் வெறும் வார்த்தை ...அது பெரிய கொடுமை என்றும் சொல்லத் தகும்.</p><p>உங்கள் குடியிருப்பில் உங்கள் வீடே முதல் வீடா? பிடித்தது ஏழரைச் சனி !!!போஸ்ட் மேனில் இருந்து கறிகாய் விற்பவர் வரை ungal மண்டையில் தான் முதல் மணி அடிக்கக் கூடும் ! கூரியர் காரர்களையும் சும்மா சொல்லக் கூடாது . அடுத்த வீட்டில் ஆளில்லா விட்டால் உங்கள் வீட்டு காலிங் பெல்லே எல்லோருக்கும் இதம் தரும் இன்னிசை ஆகக் கூடும்.</p><p><strong>புரட்டாசியில் "கோவிந்தாக்கள் சங்கப் பிரபலங்கள்</strong> </p><p><strong>"ஆடியில் ..."ஆத்தாவுக்கு கூழ் ஊத்துவோர் சங்கக் கண்மணிகள்" </strong></p><p>வீட்டுக்குப் பக்கத்தில் <strong>"பிள்ளையார்...அம்மன்...நாகாத்தம்மன்...முருகன்...இன்ன பிற தெய்வங்கள் குடியிருந்தால்...திருவிழாக் காலங்களில் உங்கள் பர்ஸ் கதறிக் கொண்டு தினம் அழலாம்.</strong>அப்படி ஒரு பெருங்க் (கொள்ளைக்) கூட்டம் முற்றுகை இடும் முதல் வீட்டில் முதல் முதலாய்.</p><p>பிச்சைக் காரர்கள் சங்கம் வைத்து கூட்டம் போட்டுத் தண்டிக்க நினைத்தால் முதலிடம் முதல் வீட்டுக் காரர்களுக்கே?!</p><p> <strong>"பாழாப் போன வீடு...நாசமாப் போக...கூச்ச ...நாச்சமே இல்ல எட்டி நின்னு எட்டணா போடறான் அந்த முத வீட்டுக் முட்டாக் கபோதி ..." </strong>திட்டுக்கள் தாராளமாய் விழலாம் என்றேனும் நீங்கள் அச்சங்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராய் கலந்த கொள்ள வாய்ப்பிருப்பின்!!!</p><p>இது மட்டுமா?</p><p><strong>விற்ப்பனை பிரதிநிதிகளின் வயிற்றெரிச்சல் வேறு</strong>?</p><p><strong>"எப்போ போனாலும் லேசா தொறந்து எட்டிப் பார்த்துட்டு வேணாம் போன்னு வெரட்டுறான் அந்த வெங்கம் பய ..." </strong> இவனப் போயி எவன் குடி வச்சான் முத வீட்டுல? சனி முகத்துல முழிச்ச மாதிரி தான் ஒன்னும் போனியாகள இன்னைக்கும்"</p><p>இதெல்லாம் சும்மா சாம்பிளுக்கு தான் ...</p><p>அனுபவம் இருந்தா நீங்களும் கொட்டுங்க உங்க மான அவமானத்தை .</p><p>குறிப்பு:- <strong><span style="font-size:85%;">முதல் வீட்டுக் குடித்தனக்காரராகவோ அல்லது அப்படிப் பட்ட அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் .</span></strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-26251742073423185802008-12-17T02:05:00.000-08:002008-12-17T02:38:04.291-08:00பஸ் ஸ்டாண்ட் பெண்கள்அவள் பெண்ணா இல்லை பேரழகியா ?<br />ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் பார்த்தேன் ஒருநாள்.அந்த நாளே முதல் நாள்!அவள் என்னைப் பார்த்தாளா இல்லையா என்பது இன்றும் எனக்குத் தெரியாது.<br />நான் அவளைப் பார்த்தேன் ...<br />நான் மட்டுமே அவளைப் பார்த்தேன் என்பதற்கில்லை...!<br />அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இன்னும் சிலரும் கூட பார்க்கத்தான் செய்திருப்பார்கள் ?!<br />அதெல்லாம் சும்மா டைப் ஆசாமிகளாக இருக்கலாம்!<br />ஜாலி சைட் ஜல்லிகளாகவும் இருக்கலாம்!<br />என்னைப் போல அவள் ஒவ்வொரு அசைவையும் யாரேனும் பார்த்தார்களோ என்னவோ ?வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். அவளது கண்களை விட்டு என்னால் அகலவே முடியவில்லை.நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை அவள் உணர்ந்தது போலவே தெரியவில்லை.<br />நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறாள் அவள்.நானும் தான்.அவள் ஏற வேண்டிய பேருந்து இன்னும் வரக் காணோம்.அப்போது நேரம் மாலை 4.30 pm .இன்னும் 2 மணி நேரம் போனாலும் பரவாயில்லை அவளை ஏற்றிச் செல்லும் பேருந்து மட்டும் வரக் கூடாது இப்போதைக்கு என்று நினைத்துக் கொண்டேன்.<br />நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பேருந்து வந்தது .<br />அதுவே அவள் செல்லும் பேருந்து .<br />ஒயிலாக ஏறிக் காணாமல் போனால் என் கண் கவர்ந்த பெண் மயிலாள் .<br />என்ன செய்வேன் நான்?<br />அடுத்த பேருந்துக்கு காத்திருந்தேன் என்று கற்ப்பனை செய்யாதீர்கள்!!!எனக்கும் செல்ல வேண்டிய பேருந்து வரவே நானும் அதில் ஏறிக் கடந்தேன் .<br />அவ்வளவு தான் .<br />நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்களோ...கொள்வீர்களோ....? நடந்தது இது தான் .<br />இது மட்டும் தான்!!!karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-45618597250246250792008-12-16T10:15:00.000-08:002008-12-16T10:19:56.221-08:00உன்னோடு நானிருந்த பொழுதுகளில் எங்கே நான் தொலைந்தேனோ?<p>பள்ளி விட்ட </p><p>மாலை நேரம்</p><p>முதன் முதலாய் </p><p>புத்தம் புது தாவணியில் </p><p>சிட்டாக நீ பறக்க யத்தனிக்கையில்</p><p>செப்பனிட குவிக்கப் பட்ட </p><p>சரளைக் கற்களில்</p><p>இடரப் பட்ட உன் பாதங்கள் </p><p>தடுமாறி சரியும்போதா</p><p>இடம் மாறியது என் நெஞ்சம்?!</p><p>இன்னும் தெளிவில்லை ...!</p><p>எட்டி நின்று பெட்டிக்கடையில் </p><p>முறுக்கு வாங்கித் தின்கையிலே</p><p>விட்டு விட்டு அலறிய </p><p>உன் மென் குரலால் </p><p>சட்டென்று விழி நிறைத்தாய்</p><p> என் சிந்தையிலும் நீ நிறைந்தாய்... </p><p>பட்டு பூச்சியடி ...</p><p>நீ என் பாவை சந்திர பிம்பமடி !</p><p>அன்று நீ விழுந்திடாமல் </p><p>பாங்கோடு தாங்கி எழுப்பியவன் </p><p>அன்றே தான் விழுந்து விட்டேன் </p><p>உன் படபடக்கும் இமை நடுவில் ?!</p><p>எங்கே போனாலும் </p><p>உன் நினைவு துரத்துதடி </p><p>காணாமல் போனது போல் </p><p>வாழ மனம் முயலுதடி ...</p><p>என் கண்ணில் பாவையன்றோ ?</p><p>கண்ணம்மா எங்கும் உனைக் காண்பேனோ?</p><p>இன்னும் ஒரு பிறவி எடுப்பேனோ </p><p>ஏந்திழையே உனக்காக !?</p><p>எங்கே நான் தொலைந்தேன் ?</p><p>காதலில் உருகி வழியும் போதா ?</p><p>பெண் கேட்டு வந்த போதா ?</p><p>திருமணம் பேசி முடித்த போதா?</p><p>மூன்று முடிச்சு இட்ட போதா ?</p><p>ஊது பத்தி புகை மணக்க </p><p>கட்டில் சம்பங்கி மணம் நிறைக்க </p><p>கண்ணோடு கண் சேர்த்து </p><p>முயங்கும்போதா ...?!</p><p>எங்கே நான் தொலைந்தேன் ?</p><p>பிள்ளைக் கனியமுதாய்</p><p>பேசும் பொற்சித்திரமாய் </p><p>சின்னவளை மடியிலிட்டு</p><p>தாலாட்டுச் பாடிப் பாடி </p><p>என்னையும் தூங்க வைத்தாய் ...</p><p>அங்கே தான் தொலைந்தேனோ?</p><p>இன்னும் தெளியவில்லை </p><p>எங்கே தான் தொலைந்தேனோ?</p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-23002227602830426932008-12-16T08:31:00.000-08:002008-12-16T08:58:01.616-08:00அதென்ன உட்டாலக்கடி வேலை?<div align="center"><strong>அதென்ன பாரபட்சம் ?</strong></div><div align="center"><strong>தமிழ்மணம் ஒரு திரட்டி .அதில் இடுகைகளை புதியவர்களும் இடுகிறோம்,பழைய பதிவர்களும் இடுகிறார்கள்.எப்போது பார்த்தாலும் ஒரு சில பதிவர்களின் இடுகைகள் மட்டுமே சூடான இடுகைகளிலும்...வாசகர் பரிந்துரைகளிலும் வருகிறது,இது எப்படி சாத்தியம்? அப்படி சூடான இடுகைகளில் வரும் பதிவுகள் தான் நல்ல பதிவுகளா என்ன? எந்த அடிப்படையில் சூடான இடுகைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன?அதிக பின்னூட்டங்கள் பெற்ற இடுகைகள் தான் சூடான இடுகைகளா?அப்படியானால் பதிவர்களே அனானி பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டும்...கருத்துக்கள் அற்ற வெறும் கண் துடைப்பு</strong></div><div align="center"><strong>( உதாரணம்:- மீ த பஸ்ட்...</strong></div><div align="center"><strong>டூ...</strong></div><div align="center"><strong>த்ரீ</strong><strong>...</strong></div><div align="center"><strong>இன்பினிட்டி...</strong></div><div align="center"><strong>)என்று பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டால் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இங்கே வாசகர் பர்ந்துரை தேர்ந்தெடுக்கப் படுகிறதா?ஒரு சில பதிவுகளைத் தவிர பெரும்பாலான பதிவுகளும் சூடான இடுகை மற்றும் வாசகர் பரிந்துரைகளில் வருபவை எல்லாம் அப்படி கருத்து செறிவோ...விஷய ஞானமோ உள்ள பதிவுகளாகத் தெரியவில்லையே?! உண்மையில் பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகின்றன? இந்த லட்சணத்தில் விருதுகளை வேறு அறிவித்திருக்கிறீர்கள்!விருதுகள் எந்த அடிப்படையில் அளிக்கப் பட இருக்கின்றன என்பது குறித்தும் தெளிவான விளக்கம் எதுவும் இதுநாள் வரையிலும் இல்லை.யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? யாருடைய இடுகை விரைவாக சூடாகிறதோ அவர்களுக்கு கொடுத்து விட்டுப் போவதற்க்கேன் அறிமுகப் பதிவர்களில் இருந்து சில மென் பதிவர்கள் (இவர்கள் யாரையும் திட்டியோ தனி மனித தாக்குதலிலோ ஈடுபடாதவர்கள்) வரை எல்லோரையும் ஏமாற்ற வேண்டும் ?ஐயா தமிழ் மன நிர்வாகிகளே...பழம் பெரும் ...முத்து பெரும் பதிவர்களே...உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் ...புதியவர்களது நல்ல ரசனையான பதிவுகள் பிரபலமாக என்ன தான் செய்து தொலைக்க வேண்டும் என்று??????????????????? இங்கே யோசித்து யோசித்து மண்டை காய்கிறது.ஏன் வெளிப்படையாகவே கேட்கிறேன்....உண்மையைச் சொல்லுங்கள்.</strong></div><div align="center"><strong>லக்கிலுக்</strong></div><div align="center"><strong>அதிஷா </strong></div><div align="center"><strong>கார்க்கி</strong></div><div align="center"><strong>தாமிரா...</strong></div><div align="center"><strong>பரிசல்காரன்...</strong></div><div align="center"><strong>இவர்களது பதிவுகள் மட்டும் தான் சூடாகுமா?</strong></div><div align="center"><strong>ஏன் இவை மட்டும் தான் ரசனை மிக்க பதிவுகளா?</strong></div><div align="center"><strong>ஏன் இவர்களை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு தமிழ்மணத்தில் கொண்டாடுகிறார்கள்?</strong></div><div align="center"><strong>இவர்களது பதிவுகள் நன்றாக இருந்தாலும் ....இவர்களை விடவும் அர்த்தமுடன் சில பதிவர்கள் பதிவுகளை இட்டிருக்கின்றனரே !!!நான் ரசித்த அந்தப் பதிவுகளை ஏறக்குறைய எல்லோருமே ரசித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.உதாரணத்திற்கு ;</strong></div><div align="center"><strong>துளசிதளம்</strong></div><div align="center"><strong>சித்திரக்கூடம்</strong></div><div align="center"><strong>அபிஅப்பா</strong></div><div align="center"><strong>முரண்தொடை</strong></div><div align="center"><strong>இப்படிப் பல ....</strong></div><div align="center"><strong>ஏன் இவர்களது பதிவுகள் எல்லாம் சூடான இடுகைகளில் இல்லை ?யாராவது பதில் சொல்லுங்கப்பா ?!</strong></div>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-52677176220513564412008-12-13T06:34:00.000-08:002008-12-13T06:53:56.101-08:00மீன்...மீன்...மீனோய்...நெய் மீனோய்<strong>நெய் மீன் </strong><br /><strong>வாளை மீன் </strong><br /><strong>விலாங்கு மீன்</strong><br /><strong>வஞ்சிரம் மீன் </strong><br /><strong>இறால் மீன் </strong><br /><strong>சீலா மீன் </strong><br /><strong>சங்கரா மீன் </strong><br /><strong>திருக்கை மீன்</strong><br /><strong>மடவை மீன்</strong><br /><strong>கோலா மீன்</strong><br /><strong>விரால் மீன் </strong><br /><strong>அயிரை மீன் </strong><br /><strong>கெண்டை மீன் </strong><br /><strong>கெளுத்தி மீன் </strong><br /><strong>சுறா மீன் </strong><br /><strong>எனக்குத் தெரிஞ்சது இம்புட்டுத்தேன் ...<br />அப்பால ...</strong><br /><strong><span style="font-size:130%;">"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.... சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம் ..."</span></strong><br /><strong>பாட்டையும் கூட ரெபெர் பண்ணிப் பாத்துப்புட்டோம் .இந்த ஜாமீன் மட்டும் எங்கன விக்குமுன்னு தெரியலையே .</strong><br /><strong><span style="font-size:130%;">"விண்மீன் அது வானத்துல நீந்துது </span></strong><br /><strong><span style="font-size:130%;">ஜாமீன் எங்கன நீந்துமோ ?! "</span></strong><br /><strong>ஒண்ணுமில்ல நம்ம வடிவேலு அண்ணாச்சிக்கு ஜாமீனு வேணுமாம் காலைல அல்வா வாசு சன் டி.வி. காமெடி சோவுல சொன்னாரு .அதேன் இங்கிட்டு கேட்டுப் பாக்கலாமேனு வந்துட்டோம்.</strong><br /><strong>இங்கன வாரவுக ஜாமீனு கொண்டுகிட்டு வரலாங்காட்டியும் கருத்து மீனையாச்சும் குத்திட்டு போங்க, </strong>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-65761631440473528332008-12-13T05:18:00.000-08:002008-12-13T05:40:55.368-08:00தினம் பல் விளக்குபவர்கள் மட்டும் இதைப் படிங்க இல்லாங்காட்டி போய்க்கினே இருங்க...!!!<div align="left"><strong>தினம் ஆயிரத்து சொச்ச டூத் பேஸ்ட் விளம்பரம் டி.வி ல வருதில்ல...அதப் பார்த்து அதுல வர்ற எதோ ஒரு பேஸ்ட் வாங்கி வீட்ல போட்டுக்கறோம் .இப்ப கேள்வியே ஒரு மாசத்துக்கு நீங்க எத்தினி பேஸ்ட் வாங்கி உங்க பல்ல விளக்கறிங்க? நானும் நிறைய இடத்துல பாத்துபுட்டேன்,</strong></div><div align="left"><strong>அட என்னா கொடுமைன்னா மாசம் நாலு பேஸ்ட் வாங்கியும் பத்தலையாம் சில வீடுகள்ல?!என்ன தான் பண்றாக ...ஃபேரன் லவ்லிக்கு பதிலா மூஞ்சில தேச்சுக்கறாங்கலோனு பீதியாவுது. இல்லாங்காட்டி டியுப்ள விக்கிற சாக்லேட்டுனு தின்னே தீக்குராங்களோ...? என்ன தான் பண்றாகன்னு research பண்ணிப் பார்த்தாக்க அப்புறம் தெரிஞ்சது சூட்ச்சுமம் !</strong></div><div align="left"><strong>பேஸ்ட் கம்பெனிக்காரன் விளம்பரம் பார்த்து பேஸ்ட் வாங்கற நம்ம மன்னாரு மொக்கைச் சாமிகள் அதுல இலவசமா தர்ற பிரஷ் நீளத்துக்கு பேஸ்ட்டைப் பிதுக்கி தினம் தேய்க்கிறான் பல்லு .ஆனாலும் நாத்தம் மட்டும் போகல ?!அண்ணன்களே...தம்பிகளே....அக்காக்களே...தங்கச்சிகளே ...பல் விளக்குவான்(அதாங்க பிரஷ்!!!) இருக்குல்ல அதுல சும்மா இத்தனூண்டு பட்டாணி சைஸ் ல பேஸ்ட்டைப் பிதுக்கித் தேச்சா போதும் .பல்லு விளங்கிரும்.இது நான் சொல்லல ...பல் மருத்துவர்கள் சொன்னது.</strong></div><div align="left"><strong>எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே நு இங்கன கூவினோம்.</strong></div><div align="left"><strong>அப்புறம் வரட்டுமா...நாளைக்குப் பார்போம். </strong></div><div align="left"><strong>எத்தினி பேரு நான் சொன்னத கேட்ருக்காகனு ....</strong></div>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-55984872766587827132008-12-07T09:46:00.000-08:002008-12-07T09:51:46.883-08:00க்விஸ்...க்விஸ்...க்விஸ்...?!<p>க்விஸ் ...க்விஸ்...க்விஸ்!!!</p><p>அட சுவிஸ் ...இல்லங்க க்விஸ்?!</p><p>இப்போ நான் சில கேள்விகள் கேட்பேனாம் ,</p><p>அதுக்கு இந்தப் பதிவை யாரெல்லாம் எட்டிப் பார்க்கிராங்களோ அவங்க பதில் போடுவீங்கலாம் பின்னூட்டத்துல.உங்க பொது அறிவை சோதிச்சுப் பர்ர்க்க ஒரு சின்ன வாய்ப்பு தான் ...!!!</p><p>போலாமா ரைட்...ரைட் ...ரைட்...</p><ol><li>மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?</li><li>சூரியநாராயண சாஸ்திரிகள் தன் பெயரை எப்படித் தமிழ்ப் படுத்திக் கொண்டார்?</li><li>பங்கஜம் இச் சொல்லை எப்படித் தமிழ்ப் படுத்தலாம்?</li><li>ரயில் இதன் தூய தமிழ்ப் பெயர் என்ன?</li><li>அஞ்சுகம் என்பது எதைக் குறிக்கும்?</li><li>வேழம் என்பது எதைக் குறிக்கிறது?</li><li>புத்தர் பிறந்த இடம் எது?</li><li>தார் பாலைவனம் எங்கு இருக்கிறது ?</li><li>பொய்யே சொல்லாத இந்து அரசர் யார்?</li><li>கௌடில்யர் எழுதிய நூலின் பெயர் என்ன?</li></ol><p>ஓ.கே </p><p>இப்போ பதில்களைப் பின்னூட்டத்தில சொல்லிட்டிங்கனா உங்களுக்கு மதிப்பெண் கொடுக்க வசதியா இருக்கும் .</p><p>நான் ரெடி ...நீங்க ரெடியா ? </p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-8101812815125941532008-12-06T06:33:00.000-08:002008-12-06T07:20:24.243-08:00பெண் மலர் தான் மலிவல்ல...?!<div align="left"><strong>பெண் மலர் தான் மலிவல்ல...</strong></div><div align="left"><strong>சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது ,</strong></div><div align="left"><strong>சில்லிட்டு உறையாமல் </strong></div><div align="left"><strong>சிக்காமல் மீண்டு எழுந்தால் ;</strong></div><div align="left"><strong>பெண் மலர் தான் மலிவல்ல...!</strong></div><div align="left"><strong>ஆப்பிள் தேவதைகள் தான் ...</strong></div><div align="left"><strong>அழுகிப் போகாமல் காக்கும் வரை ;</strong></div><div align="left"><strong>சாக்லேட் தேவதைகள் தான் ...</strong></div><div align="left"><strong>சாக்கடையில் நழுவாமல் </strong></div><div align="left"><strong>தன்னைத் தானே காக்கும் வரை;</strong></div><div align="left"><strong>பெண் மலர் தான் மலிவல்ல!</strong></div><div align="left"><strong>ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்...</strong></div><div align="left"><strong>ஏவல்களில் தேய்ந்து போன </strong></div><div align="left"><strong>பெண்ணியத்தின் முதுகெலும்பில் </strong></div><div align="left"><strong>விரிசல்களை எண்ணக்கூட </strong></div><div align="left"><strong>வராதொழிக்கும் ஆதாமை </strong></div><div align="left"><strong>சட்டை செய்யாது </strong></div><div align="left"><strong>விட்டு விடுதலையாகி </strong></div><div align="left"><strong>சிட்டுப் போல் சிறகு விரித்து </strong></div><div align="left"><strong>பறந்து திரிந்து </strong></div><div align="left"><strong>ஊரில் பல </strong></div><div align="left"><strong>பாரில் பல </strong></div><div align="left"><strong>கற்றுத் தெளிந்தாளானால் </strong></div><div align="left"><strong>பெண் மலர் தான் மலிவல்ல!</strong></div><div align="left"><strong>நாசாவில் ஏறி விண்வெளிக்குப் போனவள் </strong></div><div align="left"><strong>கல்பனா சாவ்லா ;</strong></div><div align="left"><strong>நாளுக்கு நாள்</strong></div><div align="left"><strong>தெருவுக்குத் தெரு ,</strong></div><div align="left"><strong>புறம் பேசியே</strong></div><div align="left"><strong>நாசமாகிப் போனவள் </strong></div><div align="left"><strong>எதிர் வீட்டுக் கமலா ...</strong></div><div align="left"><strong>அவளும் பெண்ணே!</strong></div><div align="left"><strong>இவளும் பெண்ணே!</strong></div><div align="left"><strong>தன்னைத் தானுணர்ந்து </strong></div><div align="left"><strong>வாழும் வகை புரிந்து விடின் </strong></div><div align="left"><strong>பெண் மலர் தான் மலிவல்ல!</strong></div><div align="left"><strong>சந்தோசம் சில நேரம்...</strong></div><div align="left"><strong>சங்கடங்கள் பல நேரம் ,</strong></div><div align="left"><strong>எல்லாம் கடந்து போகும் </strong></div><div align="left"><strong>இதுவும் கடந்து போகும்...!!!</strong></div><div align="left"><strong>பெண்ணுக்குப் பெண்ணே எதிராகி </strong></div><div align="left"><strong>மாதர் தம்மை இழிவு செய்யும் </strong></div><div align="left"><strong>மடமையைக் கொழுத்துவோம் ;</strong></div><div align="left"><strong>பட்டங்கள் ஆள்வதும் </strong></div><div align="left"><strong>சட்டங்கள் செய்வதும் </strong></div><div align="left"><strong>பாரினில் பெண்கள் நடத்தும் முன்னே</strong></div><div align="left"><strong>நிமிர்ந்த நன்னடை </strong></div><div align="left"><strong>நேர் கொண்ட பார்வை </strong></div><div align="left"><strong>நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நீர்மை </strong></div><div align="left"><strong>தனக்குத் தானே </strong></div><div align="left"><strong>உறுவேற்றிக் கொண்டு </strong></div><div align="left"><strong>மனதில் உறுதி கொள் </strong></div><div align="left"><strong>வாக்கினிலே தெளிவு கொள் </strong></div><div align="left"><strong>பெண்ணே நீ </strong></div><div align="left"><strong>மலர் தான் மலிவல்ல என்றுமே!!! </strong></div><p align="left"><strong></strong> </p><p align="left"><strong><span style="font-size:85%;">(இது நான் காலேஜில் படிக்கும் போது கலந்து கொண்டு ஒரு இன்டர் காலேஜ் கவிதைப் போட்டியில் எழுதி முதல் பரிசு பெற்ற கவிதை ,வரிகளில் பல ஞாபகமில்லை ,நினைவில் நின்ற வரிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறேன் .அந்த ஒரிஜினல் கவிதை இன்னும் அர்த்தம் நிறைந்த அருமையான வரிகளுடன் இருந்ததை ஞாபகம் .இப்போதாவது சில வரிகளேனும் மறக்காமல் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போனாள் எல்லாமே மறந்து விடுமோ என்னவோ என்று தான் இதைப் பதிவிட்டேன் .படிப்பவர்கள் தங்களது கருத்துகளைச் சொன்னால் தேவலை !!! )</span></p><div align="left"><br /><br /></strong></div>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-7643101979872072792008-12-03T01:33:00.000-08:002008-12-03T01:35:40.823-08:00தாம்பத்யக் கூத்து<p>தெர்மாக்கோல் </p><p>அட்டை மேல் </p><p>சிக்கலின்றி </p><p>ஊடுருவிச் செல்லும் </p><p> சூடான கத்தி போல </p><p>என்னுள்ளே </p><p> ஊடுருவ </p><p> எப்படியோ </p><p>உன்னை நான் </p><p>அனுமதித்தேன் </p><p>என் சொல்கிறாய்... </p><p>என் கணவா?</p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-7165464793228642502008-12-03T01:27:00.000-08:002008-12-03T01:28:58.434-08:00முயலாமை<p><strong>எல்லா </strong></p><p><strong>சமாதானங்களின் </strong></p><p><strong>முதுகின் மேலும் </strong></p><p><strong>சுமக்க </strong></p><p><strong>முடியாமல் </strong></p><p><strong>தொக்கி </strong></p><p><strong>நிற்கும் </strong></p><p><strong>இயலாமைகள் </strong></p><p><strong>முயலாமைகளோ?!</strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-5064260311869505882008-12-02T06:08:00.000-08:002008-12-02T06:52:13.153-08:00கதை கதையாம் காரணமாம்...(கதை சொல்லிகள்)<p><strong>நான் ஐந்து ஆறாம் வகுப்புகளில் படிக்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் ஒவ்வொரு தெருவிலும் வாசலில் திண்ணை வைத்துக் கட்டப் பட்ட வீடுகளே அதிகம் இருந்தன.</strong></p><p><strong>திண்ணைகள் பெரும்பாலும் வேறு எதற்குப் பயன்பட்டதோ என்னவோ சாயந்திரம் ஆறு மணியானால் கதை கேட்கக் கூடும் சின்னப் பிள்ளைகளுக்கு அது ஒரு பட்டறை மாதிரி தான் !!!</strong></p><p><strong>தெருவுக்குத் தெரு இப்படிப் பட்ட கதை சொல்லிக் களங்கள் அந்த நாட்களில் எங்கள் ஊரில் நான்கைந்து இருந்தன ,சுமார் முன்னூறு வீடுகளில் எண்ணி ஐம்பது அல்லது அறுபது சிறுவர் சிறுமிகள் அப்போது இருந்தோம் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு கதை சொல்லிக் களத்திலும்(திண்ணை தான்!!!) பத்துப் பதினைந்து பேராக சேர்ந்து உட்கார்ந்து கதை கேட்டிருப்போம் என்று நினைக்கிறேன்.</strong></p><p><strong>இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு கோலாகலம் தான்!!! ஆறுமணிக்குக் கதை கேட்க மதியம் சாப்பாடுப் பீரியட் முடிந்ததிலிருந்தே நேரத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே இருப்போம் .அது வேறு சதி செய்யும்! அப்போது பார்த்து சீகிரமே கடைசி பெல் அடிக்கும் நேரம் வரவே வராது...அது பாட்டுக்கு மந்தமாக நேரம் போவதைப் போல் இருக்கும்.</strong></p><p><strong>எப்போதடா சாயந்திரம் ஆகும்?</strong></p><p><strong>எப்போதடா பள்ளியில் கடைசி பெல் அடிப்பார்கள் ?</strong></p><p><strong>எப்போதடா வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வீசி விட்டு ஒரு பேருக்கு கையைக் காலைக் கழுவிக் கொண்டு எதையோ கொறித்து விட்டு கூட்டாளிகளுடன் வீதிக்கு ஓடுவோம் என்று இருக்கும்!!!</strong></p><p><strong>வீதியில் இறங்குவதோடு முடிந்து விடுமா என்ன?</strong></p><p><strong>இன்றைக்கு எந்தத் திண்ணையில் கதை சொல்பவர்கள் உட்காருவார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டுமே?</strong></p><p><strong>பொதுவாக அப்போதெல்லாம் அவரவர் அப்பா ...அம்மாக்களை விட கதை சொல்வதற்கென்றே ஒரு சில தாத்தா பாட்டிகள் இருப்பார்கள் ஊர் ஊருக்கு!!அல்லது கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஒரு சில அக்காக்கள் இருப்பார்கள்!!!அதுவும் இல்லையெனில் கண்டிப்பாக ஒரு பெரிய பையன் அல்லது பெரிய பெண் இருப்பாள் </strong></p><p><strong>(பெரிய பையன்..பெரிய பெண் என்றால் வேறு ஒன்றும் இல்லை அவர்கள் எங்களை விட கொஞ்சமே கொஞ்சம் (ஒரு மூன்று அல்லது நான்கு வயது மூத்த பெண் அல்லது பையன்) பெரியவர்கள் ஆனால் இப்படிக் கதை கேட்பதில் சீனியர்கள்!!! அவ்வளவே?!</strong></p><p><strong>எங்கள் ஊரில் ,அந்தமான் தாத்தா வீட்டுத் திண்ணை தான் ரொம்ப பேமஸ் கதை கேட்க நாங்கள் கூடும் இடங்களில் அது தான் டாப் .அங்கே தான் பேமஸ் கதை சொல்லிகள் "சரசக்கா ...சீரங்கபுரம் முருகன் ,ஜோதி அத்தை...கறுப்பி மீனாச்சி இவர்களெல்லாரும் ஆஜர் ஆவார்கள் .</strong></p><p><strong>இவர்களில் ...</strong></p><p><strong>சரசக்கா மாயாஜாலக் கதைகள் சொல்வதில் தேர்ந்தவள் ,அவள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொது சில நேரம் நமக்கே பயம் வந்து விடும் "எங்கே எந்த மந்திரவாதி வந்து நம்மைத் தூக்கிக்கொண்டு போய் விடுவானோ என்று?)"நான் உத்தம பத்தினி என்றால் ஏய் தொடையே நீ இரண்டாகப் பிளந்து இந்த மீன் முள்ளை எல்லாம் யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து விடு "என்று குத்துவிளக்கு(கதை நாயகி ) தன் இறந்து போன தாயை நினைத்துக் கொண்டு ஆணையிட்டால் அவளது தொடை இரண்டாகப் பிளந்து அவள் சொன்னதை செய்யும்...சரசக்கா இதை நமக்கு கண்கூடாகப் பார்க்க வைப்பது போலவே சன்னதம் வந்து பேசுபவர்கள் போல கதை சொல்வாள் .</strong></p><p><strong>சரசக்கா இப்போது எங்கிருக்கிறாளோ ? அவள் சொன்ன கதை மட்டும் நெஞ்சோடு நீங்காமல்!!!</strong></p><p><strong>முருகன் சொல்லும் கதைகள் பெரும்பாலும் ஹீரோ ...கொள்ளைக் கூட்டம் ..இந்த வகையறாக்கள் தான் .கண்டிப்பாக கடைசியில் ஹீரோ கொள்ளைக் கூட்டத்தை ஜெயித்து ஊர் மக்களைக் காப்பாற்றுவார் .ஒரே ஒரு கதையை முடிக்க அவனுக்கு பத்துப் பதினைந்து நாட்கள் கூட ஆகும்(பாதர் ஆப் மெகா சீரியல் வேர்ல்ட் என்று அவனுக்குப் பட்டம் கொடுத்தால் கூட தவறே இல்லை).</strong></p><p><strong>T.v (TELEVISION)கூடப் பிரபலமில்லாத அந்தக் காலத்தில் அவன் எங்களுக்கு இடையில் உணவு இடைவேளை எல்லாம் கூட விட்டுக் கதை சொன்னான் என்றால் மெகா சீரியல் தந்தை என்ற பட்டம் தரலாம் தானே?</strong></p><p><strong>ஜோதி அத்தை நிறைய சாமிக் கதைகள் சொல்லுவார்.ஆயிரம் கண் மாரியம்மாள் கதை,நீலி கதை...கருப்ப சாமி வேட்டைக்குப் போகும் கதை...அய்யனார் கதை...இப்படி நிறைய!</strong></p><p><strong>கருப்பு மீனாச்சிக்கு எம்.ஜி.ஆர் என்றால் கொள்ளைப் பிரியம் .அவளது கதைகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் தான் ஹீரோ ...வில்லன் பெரும்பாலும் அசோகன் தான்(நம்பியாரை அவளுக்குப் பிடிக்காதோ என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம்) அப்போது அவளிடம் இதைக் கேட்கவில்லை இப்போது அவள் எங்கிருக்கிறாளோ?</strong></p><p><strong>கதை சொல்லிகள் என்று தனியாக ஆட்களைத் தேடாமல் எங்களுக்குள் வாழ்ந்து இன்று எங்கேயோ இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் எதோ சில சமயங்களில் நினைக்க வைப்பது அவர்கள் சொன்ன கதைகள் தானே!!!</strong></p><p><strong>ஞாபகம் வந்ததால் இதைப் பதிந்தேன் .</strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-36170090507655522322008-12-01T08:52:00.000-08:002008-12-01T09:19:08.629-08:00அப்படிப் போடுங்க கலைஞரே!!!<div align="left"><strong>கலைஞரை விட சிறந்த ஒரு ராஜதந்திரியை எங்கு தேடினாலும் கிடைப்பது அரிதே.தேர்தல் நெருக்கத்தில் முட்டிக் கொண்டு நின்ற எல்லோரையுமே ஏதோ ஒரு வகையில் சாந்தப் படுத்தி நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றி விட்டாரே!!!.</strong></div><div align="left"><strong>மாறன் பிரதர்ஸ்...மதுரை அழகிரி பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்று தான் பொது மக்கள் நினைத்திருக்கக் கூடும்,இதோ இன்றென்னவோ ஒன்று சேர்ந்து விட்டதைப் போல ஒரு காட்சி பிழையை உண்டாக்கி இருக்கிறார்கள்!பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இவர்களது ஒற்றுமையை .</strong></div><div align="left"><strong>காடு வெட்டி குருவை விடுதலை செய்து ராமதாசையும் கூல் பண்ணி விட்டார்,குரு எதற்கு கைது செய்யப் பட்டார்? கலைஞரை திட்டியதற்கா அல்லது தேசியப் பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கும் வண்ணம் தனி மனித நிந்தனையும்,மிரட்டலும் விடுத்ததர்க்கா?அதுவே இன்னும் புரிந்த பாடில்லை.</strong></div><div align="left"><strong>அதற்குள் கூட்டணியில் இருந்து பா.ம.கா விலகல்...ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் பத்திரிகைகளில் சாடல் எல்லாம் முடிந்து இலங்கைப் பிரச்சினை வந்தது,அது முடியவில்லை ...அதற்குள் வை.கோ கைது .seeman,அமீர் கைது என்று பிரச்சினை திசை திரும்பியது .</strong></div><div align="left"><strong>யார் யாரெல்லாமோ புதுக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்கள் எனும் காமெடி ஹாஸ்யம் உலா வந்தது.</strong></div><div align="left"><strong>இது அந்த இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னவோ?கடந்த ஒரு வாரமாக பேய் மழையாகக் கொட்டி முழக்கி விட்டு பெரும் களேபரத்தை உண்டாக்கி ஓயும் முன் மும்பையில் குண்டு வைத்தார்கள் சில மூட மிருகங்கள்,"இந்தியன் தானே எல்லாம் தாங்குவான் "என்று இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்குமோ என்னவோ?ஏதோ இன்றைக்கு காலையில் தான் ஒனால் போகிறதென்று வானம் சூரியனை கொஞ்சம் வெளியில் காட்டியது.அப்பாடா என்று ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டு நிமிர்வதற்குள் ;</strong></div><div align="left"><strong>மாறன் அழகிரி சந்திப்பு,கலைஞர் மாறன் சந்திப்பு என்று ஊடகங்கள் பல்லாண்டு பாடுகின்றன.எது எப்படியோ?எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கலைஞர் வீட்டு குடும்பச் சண்டை மாகாத்மியங்களையும் கேட்டே ஆகா வேண்டிய கட்டாய சூழ்நிலை தன்மானத் தமிழனுக்கு இன்று வந்து விட்டது .பத்திரிக்கை முதற்கொண்டு...டி.வி வரை ஊடகங்களின் துணை கொண்டு அவர்கள் என்னவோ ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே நவீன மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வாரிசு அடிப்படையில் பதவிகளை அனுபவித்துக் கொண்டு இன்னும் நீண்ட காலம் நல்லாட்சி தருவார்கள் .</strong></div><div align="left"><strong>நம்பிக்கையில் நான்காம் நிலைத் தொண்டன் போஸ்டர் ஒட்டட்டும் .</strong></div><div align="left"><strong>நாமெல்லாம் வேடிக்கை பார்ப்போம்!!!</strong></div><div align="left"><strong>வேறு என்ன கிழித்து விட முடியும் நம்மால் இதைத் தவிர?!</strong></div>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-29845597146955975492008-11-29T03:48:00.000-08:002008-11-29T03:56:59.729-08:00பூந்தளிரும்...பாலமித்ராவும்...அம்புலிமாமாவும்...ராணிகாமிக்சும் இப்போது வருவதில்லையா?<p align="left"><strong>பூந்தளிரும்...பாலமித்ராவும்...அம்புலிமாமாவும்...ராணி காமிக்சும் இப்போது வருவதில்லையோ ? ரொம்ப நாள் ஆகிறது அதெல்லாம் வாசித்து!</strong></p><p align="left"><strong>முன்னெல்லாம் பாட்டி ஊருக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது மூன்று மணி நேரமாக பயணநேரம் வாட்டி எடுக்கும் .அதன் வெறுமையை தீர்க்க மேற்சொன்ன புத்தகங்களே எனக்கும் என் தங்கைக்கும் துணையாகிப் போன நாட்களின் சுகம் இன்றும் ஞாபகத்தில் இனிக்கிறது.</strong></p><p align="left"><strong>அதே புத்தகங்கள் இப்போது எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை?கிடைக்குமா...கிடைக்காதா என்றும் தெரியவில்லை...ஆனாலும் அது ஒரு காலம்!பொன்னான தருணங்கள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம் .என் மகளுக்காக அந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்குமா என்று தேடத் தோன்றுகிறது...?!அதுவே அவற்றின் வெற்றி.</strong></p><p align="left"><strong>பாலமித்ராவில் வரும் பட்டி விக்ரமாதித்தன் கதை...</strong></p><p align="left"><strong>பூந்தளிரில் வரும் கபீஷ் என்ற ஒரு குரங்குக் கதை...</strong></p><p align="left"><strong>சம்பக் என்ற முதலை ...</strong></p><p align="left"><strong>பெரும்பாலும் பறவைகளையோ...அல்லது விலங்குகளையோ மட்டுமே ஹீரோ ...ஹீரோயின்களாக தாங்கி வரும் இந்தக் கதைகள் படிக்க மிகச் சுவையானவை(அந்த வயதில் ...! சொன்னேன்).</strong></p><p align="left"><strong>ராணி காமிக்ஸில் வரும் "மாயாவி" தொடர் ..."ஜேம்ஸ்பாண்ட்" தொடர் இன்னும் நிறைய சொல்லாம் .</strong></p><p align="left"><strong>சிலது இப்போது மறந்து போயிருக்கலாம்;</strong></p><p align="left"><strong>அப்புறம் இருக்கவே இருக்கிறது நமது "சிறுவர்மலர்"சிறுவர்மலர் எப்போதடா வரும் என்று காத்திருந்து முதல் ஆளாய் படித்து முடிக்க எங்கள் வீட்டில் எப்போதும் எனக்கும்...என் தங்கைக்கும் சண்டை வரும் .</strong></p><p align="left"><strong>வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஐந்து மணிக்கே விளிப்புத் தட்டி விடும்...மாற்ற நாட்களெல்லாம் ஆறு ஆறரை ஏன் சமயத்தில் எழு கூட ஆகலாம் ஒன்பது மணி பள்ளிக்கு எழு மணிக்கு எழுந்தால் போதாதா என்ன? உள்ளூர் பள்ளி தானே என்ற சமாதானம் எல்லாம் வெள்ளியன்று மட்டும் கிடையாது ...!</strong></p><p align="left"><strong>சிறுவர்மலர் அட்டைப்படத்தைப் பார்த்து அதில் தாமரைப் பூவோ என்னவோ படம் இருக்கும் லோகோ போல அதைப் பார்த்தால் அப்போது அவ்வளவு சந்தோசம் வரும் ...</strong></p><p align="left"><strong>என் மகளுக்கு தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் ஏதாவது ஒரு நீதிக் கதை சொல்வதை இப்போதெல்லாம் வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.</strong></p><p align="left"><strong>அது ஆமை முயல் கதையோ... </strong></p><p align="left"><strong>காகமும் ,நரியும் கதையோ...</strong></p><p align="left"><strong>நான்கு பசுக்கள் கதையோ...</strong></p><p align="left"><strong>புறா...எறும்புக் கதையோ...</strong></p><p align="left"><strong>இல்லாவிட்டால் புராணக் கதைகளோ ...கற்பனை விரவிய மாயாஜாலக் கதைகளோ ...எதுவோ ஒன்று ஒவ்வொரு இரவும் தூங்கப் போகும் முன் கட்டாயமாக்கி இருக்கிறேன் ...;</strong></p><p align="left"><strong>அவளுடைய கற்பனை வளத்தை வளர்க்கவோ...பல்முனை அறிவைத் தூண்டவோ எதுக்காக என்றெல்லாம் என்னையே நான் கேள்வி எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தினம் தினம் ஒரு கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் .இப்போது நான் மறந்தாலும் அவள் விடுவதில்லை ...இன்னைக்கு என்ன ஸ்டோரிம்மா? என்கிறாள் மறக்காமல் .</strong><strong>இது தான் நான் எதிர்பார்த்தது .அதுவரை சந்தோசமாய் உணர்கிறேன். </strong></p><p align="left"><strong>இப்போதைய குழந்தைகளுக்கு புத்தகங்களுக்கு பஞ்சம் இல்லை தான் ...!!!சந்தையில் கிடைக்காத புத்தகங்களா என்ன? பணம் தான் வேண்டும் கைக் கொள்ளாமல் புத்தகங்களை அள்ளிக் கொள்ளலாம்,அதென்னவோ என்ன இருந்தாலும் அந்தக் காலம் போல வருமா ?என்ற எண்ணம் மட்டும் போக மாட்டேன் என்கிறது .</strong></p><p align="left"><strong>எனக்குத்தான் முதலில்...இல்லை எனக்கு தான் முதலில் என்று வீட்டில் நாலைந்து பேரோடு சண்டை போட்டு ...போட்டியில் வென்று படிக்கும் சுகமே அலாதி தானே!!!இன்றைய குழந்தைகள் ஆளுக்கு ஒன்றல்லவா(எதுவானாலும் அவரவர்க்கென்று தனித் தனியாக) கேட்கின்றன!!! </strong></p><p align="left"><strong>எது எப்படியோ ?எனக்குத் தெரிந்தவரை கதைகளை வாசித்துக் காட்டியோ அல்லது கற்பனையாக பொருத்தமானவற்றை இட்டுக் கட்டிச் சொல்லியோ எப்படியோ ஒரு வகையில் என் குழந்தையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்க வேண்டுமென்று உணர்ந்ததால் இதையெல்லாம் செய்து வருகிறேன் .</strong></p><p align="left"><strong>இன்றைய டவுட் :-</strong></p><p align="left"><strong>பூந்தளிர் </strong></p><p align="left"><strong>பாலமித்ரா </strong></p><p align="left"><strong>அம்புலி மாமா </strong></p><p align="left"><strong>கோகுலம் </strong></p><p align="left"><strong>ராணி காமிக்ஸ் </strong></p><p align="left"><strong>இந்தப் புத்தகங்கள் எல்லாம் இப்போதும் வருகின்றனவா ?எங்கே இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் என்று தெரிந்த வலைப் பதிவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் கூறுங்கள்.</strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-43971792539917624462008-11-26T01:54:00.000-08:002008-11-26T02:45:51.096-08:00டாய்லட்டில் குளித்த தங்க டாலர்...!!!<p><strong>சட்டென்று மூச்சடைத்ததைப் போல ஆயிற்று...</strong></p><p><strong>திக்...திக் என்று நெஞ்சு அடித்துக் கொண்டது !</strong></p><p><strong>சும்மாவா?</strong></p><p><strong>இப்போது என்ன செய்யலாம் ?</strong></p><p><strong>திடு திப்பென்று யோசிக்கக் கூட முடியாததைப் போல ஒரு சில நொடிகள் மூளை ஸ்தம்பித்துப் போனது.</strong></p><p><strong>மயக்கம் வருவதைப் போலக் கூட இருந்தது .</strong></p><p><strong>வெளியே ஹாலில் அப்பா யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்.</strong></p><p><strong>அம்மாவின் சத்தத்தைக் காணோம்...ஒரு வேலை சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் !</strong></p><p><strong>இருவரும் இன்னும் பத்துப் பதினைந்து வினாடிகளில் பறந்து விடுவார்கள் அவரவர் வேலைக்காக ?!பிறகு மாலை மங்கிய பின்தான் கூடடைவது வழக்கம்.</strong></p><p><strong>அது தினம் தினம் நடப்பது தானே!அதைப் பற்றி இப்போது என்ன?</strong></p><p><strong>என் கஷ்டம் எனக்கு சீக்கிரமாக யோசித்து ஏதாவது செய்தே ஆக வேண்டும் உடனே...ஆமாம் ...உடனே!!!</strong></p><p><strong>கொஞ்சம் கூட நேரமே இல்லை .</strong></p><p><strong>ஊரிலிருந்து பாட்டி வேறு இன்றைக்குப் பார்த்தா இங்கு வரவேண்டும்?</strong></p><p><strong>நல்ல வேலை இப்போது இங்கே இல்லை ....சித்தப்பா வீடு வரை போயிருக்கிறாள்...பாட்டி வருவதற்கு முன் ஏதாவது செய்து என் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும்...வேறு வழியே இல்லை !</strong></p><p><strong>இன்றைக்கு காலையில் அலாரம் வைத்து எழும்போது கூட இப்படி எல்லாம் எனக்கு நடக்கும் என்று நான் நினைத்துக் கூடபபார்க்கவில்லை .</strong></p><p><strong>கார்த்தி ....கார்த்தி அப்பா தான் ...புறப்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறதே?அடக் கடவுளே!!!உடனே ...உடனே ஏதாவது செய்ய வேண்டுமே ?!</strong></p><p><strong>அம்மாவின் குரல் ...</strong></p><p><strong>இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க உள்ள?</strong></p><p><strong>வெளிய வா ...நான் பாத்ரூம் போகணும்அடராமா இதென்ன புது தலைவலி!!!உட்கார்ந்த நிலையில் தான் இருந்தேன்;</strong></p><p><strong> இன்னும் டாய்லட் பீங்கானின் மேல் உட்கார்ந்தவாறு தான் இத்தனையும் இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் .</strong></p><p><strong>அம்மா மறுபடி ஒருமுறை கொஞ்சம் பலமாகக் கதவைத் தட்டினார்.</strong></p><p><strong>இனி வேறு வழியே இல்லை ."இன்னும் உள்ளே போய் இருக்க கூடாது முருகா " என்று வேண்டிக் கொண்டு எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு இடது கையை உள்ளே விட்டு தேடினேன் பீங்கானின் வழவழப்பு அருவருப்பாகத் தான் இருக்கும் என்ன செய்ய?</strong></p><p><strong>பொறுத்துக் கொண்டு இன்னும்...கொஞ்சம் உள்ளே...உள்ளே விட்டு கைக்குத் தட்டுப் பட்டு விட வேண்டும் என் அப்பனே முருகா என்று விடாமல் முணுமுணுத்தவாறு மனதை ஒருமுகப் படுத்தி விரல்களால் உள்ளே அலசினேன் </strong></p><p><strong>கவனமாக...மிக...மிகக் கவனமாக மெல்ல விரல்களால் அளந்தேன் .சுண்டு விரலில் தான் முதலில் தட்டுப் பட்டது கொக்கி ;</strong></p><p><strong>இதற்குள் அப்பா...அம்மா இருவரும் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள் வெளியில்;</strong></p><p><strong>அவர்கள் அவசரம் அவர்களுக்கு !!!</strong></p><p><strong>எப்படித் தெரியும் என் அவஸ்தை அவர்களுக்கு ?</strong></p><p><strong>டாய்லட் பீங்கானில் அமர்ந்த முதல் நொடி வரை எனக்கே தெரியாதே!எப்படியோ சுண்டு விரலில் இடித்தது இனி ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் வந்து விடாதா என்ன ? என்று தான் நான் விடாது முனைந்து கொண்டிருந்தேன் .</strong></p><p><strong>பாட்டியின் குரல் வேறு இப்போ கதவுக்குப் பின்னால் கேட்கிறதே...!</strong></p><p><strong>வந்து விடும் போல் இருக்கிறதே...நாடு விரலில் டாலரின் கீழ் முனை நழுவியது .</strong></p><p><strong>இன்னும் முயற்சிக்கலாம் ...கட்டாயம் கைக்கு சிக்கும் பெரும் முனைப்போடு இன்னும் விரல்களை விட்டு பொறுமையாக அலைந்தேன்... </strong></p><p><strong>அதற்குள் வெளியே அப்பாவின் குரல் உச்சஸ்தாயி அடைந்திருந்தது .</strong></p><p><strong>பாட்டி வேறு கூட சேர்ந்து விட்டது உள்ளிருந்தே அனுமானிக்க முடிந்தது டாலர் மட்டும் கைக்கு சிக்கட்டும் வெளியில் போய் வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை !</strong></p><p><strong>பிள்ளையாரப்பா ...எங்கம்மா ஸ்கூலுக்கு லேட் ஆகுது சீக்கிரம் ஹெல்ப் பண்ணேன் ..ப்ளீஸ் ...!</strong></p><p><strong>ஒருவழியாய் கொக்கி வசமாக கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவில் வந்து மாட்டியது .</strong></p><p><strong>சரட்டென்று வெளியில் இழுத்தேன் இடது கையை அத்தனை மலத்தோடும்...!!!வேறென்ன இருக்கும் டாய்லட் பீங்கான் கோப்பைக்குள்?</strong></p><p><strong>மடமடவென்று சுத்தம் பார்க்காமல் கைகளைக் கழுவினேன் ...</strong></p><p><strong>அம்மா கத்த..</strong></p><p><strong>.அப்பா கத்த...</strong></p><p><strong>பாட்டி கத்த...</strong></p><p><strong>ஒருவழியாய் நிதானமாய் சோப்பெல்லாம் போட்டுக் கழுவி டாலர் நாறுகிறதா என்று சோதித்து பிறகு கடைசியில் கதவைத் திறந்தேன் .மூவர் கூட்டணி என் மீது விட்டால் பாய்ந்து விட்டிருப்பார்கள் </strong></p><p><strong>பெரிய சாகஷியைப் போல ஒரு லுக் விட்டேன் நான் ...அதான் டாலர் கிடைத்து விட்டதே ...!!!கடுகடுவென்று என் அசமந்தத்தை சாடிக் கொண்டே உள்ளே நுழையப் போன அம்மாவிடம் திக்காமல் திணறாமல் நடந்ததைச் சொன்னேன்.</strong></p><p><strong>கடுவன் பூனைகளாய் மாறிப் போன மூவரும் குபீரென்று சிரித்து விட்டார்கள் .</strong></p><p><strong>டாலர் கிடைக்காமல் உள்ளே போயிருந்தால் இப்படியெல்லாம் சிரிப்பார்களா என்ன?</strong></p><p><strong>எல்லாம் டாலர் கிடைத்த மாயம்.</strong></p><p><strong>தங்கமய்யா தங்கம்!!!முக்கால் சவரன் தங்கத்தில் அழகான இதயம் வடிவ தங்க டாலர் ஆச்சுதே!!!</strong></p><p><strong>ஆள் மாற்றி ஆள் பாத்ரூம் போயிருந்தால் டாலர் இந்நேரம் செப்டிக் டாங்கில் அல்லவா கேட்பாரற்றுக் கிடக்கும் ...முக்கால் சவரன் !!!மூக்கால் அழுவார் அப்பா ...அம்மா கூடத் தான் ...ஏன் நானும் தான் !ஒரு வழியாய் கையில் சிக்கி விட்டது . </strong></p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-49761911043281626932008-11-23T00:56:00.000-08:002008-11-23T00:57:56.981-08:00இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே!!!இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே!!!karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-21435142035720898562008-11-23T00:09:00.000-08:002008-11-23T00:15:15.376-08:00மறத்தல்<p>மறத்தல் </p><p>நன்றே!</p><p>மறந்து போனது போல </p><p>நடிப்பதைக் </p><p>காட்டிலும் </p><p>மறத்தல் </p><p>நன்றே !</p><p>பழகிய தெரு </p><p>படித்த பள்ளி...கல்லூரி </p><p>முன்னாள் காதலி</p><p>மூடி வைத்த நேசம் </p><p>எல்லாம் எல்லாமே</p><p>மறத்தல் நன்றே !!! </p>karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7491112936053310064.post-4941009887623959812008-11-22T23:46:00.000-08:002008-11-23T00:01:31.286-08:00தேடுதல்மெத்தை விரிப்பின் ஓரங்களில்<br />தேடினேன்<br />கிடைக்கவேயில்லை<br />என் மனம் தேடிய வார்த்தைகள் !<br />மனச் சுருக்கங்களை<br />நீவிய பின் கிடைத்த<br />கசங்கிய வரிகளில் கூடத்<br />தேடினேன்<br />தென்படவே இல்லை<br />என் மனம் தேடிய வார்த்தைகள் !<br />ஏழு கடல்<br />ஏழு மலை<br />ஏழு குகை<br />எல்லாம் ...எல்லாம்<br />குடைந்து...குடைந்து தேடியும்<br />கிடைக்கவே இல்லை<br />என் மனம் தேடிய வார்த்தைகள் !<br />என் குழந்தையின்<br />ஒற்றை முத்தம்<br />இன்றெனக்குகுறிப்பால்<br />உணர்த்தியது<br />என் மனம் அவளிடத்தில்<br />மட்டுமே தேடாது<br />ஒழித்திட்ட அந்த வார்த்தைகளை !!!<br />இருக்குமிடத்தை விட்டு<br />இல்லாத இடம் தேடி<br />அலைவதே<br />மனித நாகரீகமோ?<br />மனதின் நாகரீகமோ?<br />ஆக மொத்தம்<br />நாகரீகத்தில் ஒட்டிக்கொண்டு<br />நரக வாழ்க்கை வாழ்கிறோம் போல !!!karthigahttp://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.com1