மெத்தை விரிப்பின் ஓரங்களில்
தேடினேன்
கிடைக்கவேயில்லை
என் மனம் தேடிய வார்த்தைகள் !
மனச் சுருக்கங்களை
நீவிய பின் கிடைத்த
கசங்கிய வரிகளில் கூடத்
தேடினேன்
தென்படவே இல்லை
என் மனம் தேடிய வார்த்தைகள் !
ஏழு கடல்
ஏழு மலை
ஏழு குகை
எல்லாம் ...எல்லாம்
குடைந்து...குடைந்து தேடியும்
கிடைக்கவே இல்லை
என் மனம் தேடிய வார்த்தைகள் !
என் குழந்தையின்
ஒற்றை முத்தம்
இன்றெனக்குகுறிப்பால்
உணர்த்தியது
என் மனம் அவளிடத்தில்
மட்டுமே தேடாது
ஒழித்திட்ட அந்த வார்த்தைகளை !!!
இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
அலைவதே
மனித நாகரீகமோ?
மனதின் நாகரீகமோ?
ஆக மொத்தம்
நாகரீகத்தில் ஒட்டிக்கொண்டு
நரக வாழ்க்கை வாழ்கிறோம் போல !!!
Showing posts with label போலி. Show all posts
Showing posts with label போலி. Show all posts
Subscribe to:
Posts (Atom)