Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Sunday, December 7, 2008

க்விஸ்...க்விஸ்...க்விஸ்...?!

க்விஸ் ...க்விஸ்...க்விஸ்!!!

அட சுவிஸ் ...இல்லங்க க்விஸ்?!

இப்போ நான் சில கேள்விகள் கேட்பேனாம் ,

அதுக்கு இந்தப் பதிவை யாரெல்லாம் எட்டிப் பார்க்கிராங்களோ அவங்க பதில் போடுவீங்கலாம் பின்னூட்டத்துல.உங்க பொது அறிவை சோதிச்சுப் பர்ர்க்க ஒரு சின்ன வாய்ப்பு தான் ...!!!

போலாமா ரைட்...ரைட் ...ரைட்...

  1. மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?
  2. சூரியநாராயண சாஸ்திரிகள் தன் பெயரை எப்படித் தமிழ்ப் படுத்திக் கொண்டார்?
  3. பங்கஜம் இச் சொல்லை எப்படித் தமிழ்ப் படுத்தலாம்?
  4. ரயில் இதன் தூய தமிழ்ப் பெயர் என்ன?
  5. அஞ்சுகம் என்பது எதைக் குறிக்கும்?
  6. வேழம் என்பது எதைக் குறிக்கிறது?
  7. புத்தர் பிறந்த இடம் எது?
  8. தார் பாலைவனம் எங்கு இருக்கிறது ?
  9. பொய்யே சொல்லாத இந்து அரசர் யார்?
  10. கௌடில்யர் எழுதிய நூலின் பெயர் என்ன?

ஓ.கே

இப்போ பதில்களைப் பின்னூட்டத்தில சொல்லிட்டிங்கனா உங்களுக்கு மதிப்பெண் கொடுக்க வசதியா இருக்கும் .

நான் ரெடி ...நீங்க ரெடியா ?