Sunday, February 1, 2009

என்றென்றும் கிளி கிளியே ...!?

தொடுவானக் கனவுகளை

துரத்திக் கொண்டு

ஓடும்

ஆசை

மிகுந்திருந்தும்

வட்டத்துக்குள்

ஒரு வட்டத்துக்குள்

மட்டுமே

சுழலும் வாழ்க்கை ...!

கூண்டில் அடைபடினும்

தன்னிஷ்டப் படி

பறந்து திரியினும்

கிளி கிளியே !

பருந்துகளின் பார்வையில்

என்றென்றும்

கிளி கிளியே ...!?

3 comments:

அபி அப்பா said...

நல்ல கதை! சரளமான எழுத்து நடை:-))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உறவைக் காத்த கிளி.

நட்புடன் ஜமால் said...

\\பருந்துகளின் பார்வையில்

என்றென்றும்

கிளி கிளியே ...!?\\

அருமை.