Monday, December 1, 2008

அப்படிப் போடுங்க கலைஞரே!!!

கலைஞரை விட சிறந்த ஒரு ராஜதந்திரியை எங்கு தேடினாலும் கிடைப்பது அரிதே.தேர்தல் நெருக்கத்தில் முட்டிக் கொண்டு நின்ற எல்லோரையுமே ஏதோ ஒரு வகையில் சாந்தப் படுத்தி நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றி விட்டாரே!!!.
மாறன் பிரதர்ஸ்...மதுரை அழகிரி பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்று தான் பொது மக்கள் நினைத்திருக்கக் கூடும்,இதோ இன்றென்னவோ ஒன்று சேர்ந்து விட்டதைப் போல ஒரு காட்சி பிழையை உண்டாக்கி இருக்கிறார்கள்!பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இவர்களது ஒற்றுமையை .
காடு வெட்டி குருவை விடுதலை செய்து ராமதாசையும் கூல் பண்ணி விட்டார்,குரு எதற்கு கைது செய்யப் பட்டார்? கலைஞரை திட்டியதற்கா அல்லது தேசியப் பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கும் வண்ணம் தனி மனித நிந்தனையும்,மிரட்டலும் விடுத்ததர்க்கா?அதுவே இன்னும் புரிந்த பாடில்லை.
அதற்குள் கூட்டணியில் இருந்து பா.ம.கா விலகல்...ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் பத்திரிகைகளில் சாடல் எல்லாம் முடிந்து இலங்கைப் பிரச்சினை வந்தது,அது முடியவில்லை ...அதற்குள் வை.கோ கைது .seeman,அமீர் கைது என்று பிரச்சினை திசை திரும்பியது .
யார் யாரெல்லாமோ புதுக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்கள் எனும் காமெடி ஹாஸ்யம் உலா வந்தது.
இது அந்த இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னவோ?கடந்த ஒரு வாரமாக பேய் மழையாகக் கொட்டி முழக்கி விட்டு பெரும் களேபரத்தை உண்டாக்கி ஓயும் முன் மும்பையில் குண்டு வைத்தார்கள் சில மூட மிருகங்கள்,"இந்தியன் தானே எல்லாம் தாங்குவான் "என்று இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்குமோ என்னவோ?ஏதோ இன்றைக்கு காலையில் தான் ஒனால் போகிறதென்று வானம் சூரியனை கொஞ்சம் வெளியில் காட்டியது.அப்பாடா என்று ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டு நிமிர்வதற்குள் ;
மாறன் அழகிரி சந்திப்பு,கலைஞர் மாறன் சந்திப்பு என்று ஊடகங்கள் பல்லாண்டு பாடுகின்றன.எது எப்படியோ?எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கலைஞர் வீட்டு குடும்பச் சண்டை மாகாத்மியங்களையும் கேட்டே ஆகா வேண்டிய கட்டாய சூழ்நிலை தன்மானத் தமிழனுக்கு இன்று வந்து விட்டது .பத்திரிக்கை முதற்கொண்டு...டி.வி வரை ஊடகங்களின் துணை கொண்டு அவர்கள் என்னவோ ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே நவீன மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வாரிசு அடிப்படையில் பதவிகளை அனுபவித்துக் கொண்டு இன்னும் நீண்ட காலம் நல்லாட்சி தருவார்கள் .
நம்பிக்கையில் நான்காம் நிலைத் தொண்டன் போஸ்டர் ஒட்டட்டும் .
நாமெல்லாம் வேடிக்கை பார்ப்போம்!!!
வேறு என்ன கிழித்து விட முடியும் நம்மால் இதைத் தவிர?!

No comments: